கேரளாவில் பொங்கல் விடுப்பு நாளைய தினத்திற்கு மாற்றம்-முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு

கேரளாவில் பொங்கலை முன்னிட்டு  நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பொங்கல் விடுப்பு  நாளைய தினத்திற்கு மாற்றம்-முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு
Published on
Updated on
1 min read

கேரளாவில் பொங்கலை முன்னிட்டு  நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களில், கடந்த 12 ஆண்டுகளாக  ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நடப்பாண்டு ஜனவரி 15-ம் தேதியை பொங்கல் விடுப்பு தினமாக கேரளா அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஏற்கனவே இருந்தபடி ஜனவரி 14-ம் தேதி உலகெங்கும் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடும் வகையில், பொங்கல் விடுப்பு தினத்தை மாற்றி அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் விடுப்பு தினத்தை நாளைய தினத்திற்கு மாற்றி பினராயி விஜயன் அரசு அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com