"லடாக் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன்" ராகுல்காந்தி ட்வீட்!

"லடாக் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன்" ராகுல்காந்தி ட்வீட்!
Published on
Updated on
1 min read

லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடியின் பொய் கூற்று தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


இருநாள் பயணமாக லடாக் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பைக்கில் சென்று மக்களை சந்தித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், இந்தியாவின் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததாகவும், ஆனால் இதனை பிரதமர் மறுப்பதாக கூறுவதை மக்கள் மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

லடாக்கில் அரசியல் குரல்கள் நசுக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு தொடர்பாக பொய் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும் ராகுல் தெரிவித்தார். எனவே, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் அனைத்து பிரச்னைகள் தொடர்பாக கேள்வியெழுப்புவேன் என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com