இலங்கையில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம்....தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் இலங்கையில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம்....தமிழிசை சவுந்தரராஜன்
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் என்.சி.சி மாணவர்கள் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது..புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் மற்றும் அந்தமானுக்கு நீர்வழிப்பாதை வழியாக சென்று வர திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும்,

அதே போன்று இலங்கை யாழ்ப்பாணம்  துறைமுகத்தில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருவதாகவும்  தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com