
ஏர்டெல் நிறுவனம் அதன் பிரீபெய்டு கட்டணத்தை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
ஜியோவின் வருகை காரணம் வாடிக்கையாளர் களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்கியதன் விளைவாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரிபெய்டு கட்டணங்களை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
79 ரூபாய் முதல் 498 ரூபாய் வரைஉள்ள அனைத்து திட்டங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண நடைமுறை நவம்பர் 26- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. முன்னதாக 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டண உயர்வை அதிகரித்திருப்பது அதன் பங்குதாரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.