தன்னுடன் வளர்ந்த மாட்டினை மனிதனை போல் மேய்க்கும் நாய்...! எப்படின்னு நீங்களே பாருங்க..!

கள்ளக்குறிச்சியில் நாய் ஒன்று மாடு மேய்ப்பதை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
தன்னுடன் வளர்ந்த மாட்டினை மனிதனை போல் மேய்க்கும் நாய்...! எப்படின்னு நீங்களே பாருங்க..!
Published on
Updated on
1 min read

ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் தனது மாடு மற்றும் நாயை ஒன்றாக வளர்த்து வந்துள்ளார். தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் அவரால் மாடு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியவில்லை.  

இந்த நிலையில், தனது நாயின் கழுத்தில் சங்கிலியால் மாட்டை கட்டி மாடு மேய்க்க அனுப்பி விடுகிறார். நாயானது மாட்டை இழுத்துச் சென்று புல்வெளி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகிறது. இதனை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com