
பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும், டிஜிபி மாநாட்டில் கலந்து கொள்ளவும் 3 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்கு சென்றிருந்தார். இந்தநிலையில் 56வது டிஜிபி மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, இடைவெளியின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து உரையாடினார். அப்போது பேச்சுக்கு இடையே யோகி தோளில் கைப்போட்டபடி பல்வேறு ஆலோசனைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.