வெப்பத்தை தணிக்க குடிநீர் தொட்டியில் ஆனந்த குளியலிடும் குரங்குகள்..வைரலாகும் வீடியோ...!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடிநீர் தொட்டியில் ஆனந்த குளியல் போட்டு சேட்டை செய்யும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெப்பத்தை தணிக்க குடிநீர் தொட்டியில் ஆனந்த குளியலிடும் குரங்குகள்..வைரலாகும் வீடியோ...!
Published on
Updated on
1 min read

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், தாகத்தை தீர்க்கவும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் அந்த பகுதி கவுன்சிலரின் வீட்டு மாடியில் ஏறி அங்கிருந்த குடிநீர் தொட்டியில் குதித்து ஆனந்தமாக குளியல் போட்டு சேட்டை செய்தது.

இதை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com