பயமின்றி தனது கையால் பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த இளைஞர்...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தாகத்தில் இருந்த பாம்பிற்கு வனத்துறை அதிகாரி ஒருவர் கையால் தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பயமின்றி தனது கையால் பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த இளைஞர்...இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Published on
Updated on
1 min read

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், பச்சை நிற பாம்பு ஒன்று தாகத்தில் இருப்பதை அறிந்த  இளைஞர் ஒருவர் தனது கைகளில் நீரை ஊற்றி பாம்பின் தாகம் தீர்க்கிறார். தாகம் தீர்ந்தவுடன் தண்ணீர் அருந்துவதை பாம்பு நிறுத்திக் கொள்கின்றது. இந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவின் தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ஒரு விழிப்புணர்வு பதிவையும் பதிவு செய்துள்ளார். அதாவது, ”கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் சிறிது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அது பல விலங்குகள் உயிர் வாழ வழி வகை செய்யும்” என பதிவு செய்துள்ளார்.

ஒரு உயிரின் தாகத்தை உணர்ந்து தனது கையால் தண்ணீர் கொடுத்த இளைஞரின் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியா முழுவதும் பரவி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com