தென் கொரியாவில் ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்ட ரோபோ 2-வது தளத்தில் இருந்து தற்கொலை செய்துக்கொண்டது. தென் கொரியாவில் அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'ரோபோ' உருவாக்கப்பட்டது. அரசு ஊழியராகவே பார்க்கப்பட்ட அந்த ரோபோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த நிலையில், ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இப்படி நடைபெற்றதால், இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாக அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.