அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பராவில் ஏற்பட்ட ஏரி தீ என அழைக்கப்படும் காட்டுத்தீ, ஒரே நாளில் கிட்டத்தட்ட 5,000 ஏக்கருக்கு பரவியதை அடுத்து, 300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கருகின. லாஸ் பேட்ரெஸ் தேசிய வனப்பகுதியில் உள்ள ஜாக்கா ஏரிக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மலைப்பகுதிகளில் காணப்படும் பெரிய அளவிலான புகை மூட்டம் வான்வழி காட்சிகள் மூலம் படம்பிடிக்கபட்டுள்ளது. இதுவரை 20,000 ஏக்கருக்கு மேல் தீ பரவி சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன