வங்கதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் 40 லட்சம் மக்கள்!!

வங்கதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் 40 லட்சம் மக்கள்!!
Published on
Updated on
1 min read

வங்கதேசத்தின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகனமழை காரணமாக நாட்டின் வடகிழக்குப் பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிட்டகாங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை மேலும் தீவிரமடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. குறைந்த நிலப்பரப்பு மற்றும் அதிக மக்கள் தொகையால் கடந்த சில ஆண்டுகளில் வங்கதேசம் கடும் பாதிப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com