
குஜராத்திலிருந்து லண்டன் சென்ற Boeing 787-8 ‘Take Off” ஆன சில நிமிடங்களில் வெடித்து சிதறியுள்ளது. சிதறிய இடத்திலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து பகல் 1.17 -க்கு புறப்பட்டுள்ளது.
1.39 க்கு அனுபவம் பெற்ற மூத்த விமானி சுமித் சபர்வால் ‘May Day Call” செய்துள்ளர். கட்டுப்பட்டு அறையை தொடர்புகொண்ட 3 நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீண்டும் விமானிகளை கட்டுப்பாட்டு முறையால் தொடர்புகொள்ள முடியாமல் போனது.
242 க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தில் பயணித்தனர். கிட்டத்தட்ட 270 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் இந்த விபத்தில் சிக்கிஉயிரிழந்துள்ளார்.
இதில் 1169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டிஸ்காரர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், 1 கனடா நாட்டை சேர்ந்தவர் உள்பட விமான ஊழியர்கள் சிலரும் இந்த விபத்தில் இருந்துள்ளனர். மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து சக்கரங்கள் உள்வாங்கும் முன்னரே விமானம் வெடித்து சிதறியது.
வெடித்து விழுந்த விமானம் விமான ஓடுதளத்திற்கு அருகே இருந்த மருத்துவர் விடுதி மேல் விழுந்துள்ளது. BJ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விடுதியின் மேற்கூரை மேல் விழுந்துள்ளது. இதில் கேன்டீன் பகுதிபெருமளவில் சேதமடைந்துள்ளது. இதில் 5 பயிற்சி மருத்துவ மாணவர்கள் பலியாகி உள்ளனர். ஏற்கனவே இந்த கோர விபத்தில் பயணிகள் அனைவரும் பலியாகி உள்ள நிலையில், மருத்துவ மாணவர்களும் கொத்து கொத்தாக இருந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No Power, No Thrust ..
இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் விமானத்தின் Black Box -என்ற கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது, இந்நிலையில் கட்டுப்பாடு அறையுடன் கேப்டன் சுமித்தின் கடைசி நிமிடங்கள் வெளியாகி உள்ளன. விபத்து நிகழ்ந்த அன்றைய தினம் விமானம் take off -ஆன சில வினாடிகளில் சரியாக 1.39 க்கு அனுபவம் பெற்ற மூத்த விமானி சுமித் சபர்வால் ‘May Day Call” செய்துள்ளர். மேலும் “No Power, No Thrust, Going Down” -எனக்கூறியுள்ளார். அதாவது “இங்க மின்சாரம் இல்லை, மேலெழும்பவில்லை, கீழ்நோக்கி செல்கிறது” என சொல்லயிருக்கிறார், இதை சொன்ன சில வினாடிகளில் விமானம் வெடித்து சிதறியது.
அகமதாபாத் விமான நிலையம் பறவைகள் மோதும் அபாயம் நிறைந்தது, எனக்கூறப்படுகிறது. பெரிய பறவை ஒன்று என்ஜினில் மோதியிருந்தால் கூட இப்படி ஒரு விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் கருப்பு பெட்டி - யை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே விபத்திற்கான உண்மையான காரணத்தை சொல்ல முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.