குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்ட சமூக விரோதிகள்...

குடிசை மாற்று வாரிய குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்ட சமூகவிரோதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்ட சமூக விரோதிகள்...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் சில சமூக விரோதிகள் உயிருடன் உள்ள ஆமைகளை இட்டு அப்பகுதி மக்களின் குடிநீரை அசுத்தம் செய்துள்ளதாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேருவுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து இன்று காவல்துறையினருடன் சட்டமன்ற உறுப்பினர் நேரு அடிக்கடி குடியிருப்பின் மேலே சென்று பார்த்த போது பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியில் உயிருடன் இருந்த இரு ஆமைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார் அதனை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com