ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என விமர்சித்த சந்திரபாபு நாயுடு...!

ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என விமர்சித்த சந்திரபாபு நாயுடு...!
Published on
Updated on
1 min read

சைக்கோ மாநிலத்தில் ஆட்சி செய்கிறார் என்று நாயுடு கூறியுள்ளார்.  அவரது அற்ப திட்டங்கள் மாநிலத்தை சீரழித்துவிட்டன எனவும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை எப்படி காப்பாற்றுவது என்று தெரியவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை ‘சைக்கோ’ என்று விமர்சித்துள்ளார்.  மாநிலத்தின் அழிவுக்கு அவர்களின் 'தீய திட்டங்களே' காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.  அவருக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தெரியாவிட்டால் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு கூறுகையில்,”சைக்கோ மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறார்.  அவரது அற்ப திட்டங்கள் மாநிலத்தை சீரழித்துவிட்டன.  மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை எப்படி காப்பாற்றுவது என்று தெரியவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும். மாநிலத்தில் ஜனநாயகம் இல்லை. ” என பேசியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com