இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், மற்றவர்களுக்கு தொற்றினை பரப்பும் எண்ணம் கேரளா அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களை போல் உயிரிழந்தோர் தகவலை மறைத்து வெளியிடாமல், நேர்மையாக கேரளா அரசு கொரோனா உயிரிழப்பு தகவல்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே பாராட்டியுள்ளதாக கூறியுள்ளார்.