பழங்குடி மக்களை வதைக்கிறதா 'வேதாந்தா நிறுவனம்'? வன்முறை வெடித்ததில் காவல்துறை உட்பட ஏராளமானோர் படுகாயம்!

வேதாந்தா லிமிடெட்டிற்கு ஒதுக்கப்பட்ட சிஜிமாலி சுரங்கத் தளத்தை கிராமத்துடன் இணைக்கும் சாலை அமைப்பதை, கிராம மக்களும், உள்ளூர் பழங்குடியின சமூகத்தினரும் எதிர்த்து வருகின்றனர்
பழங்குடி மக்களை வதைக்கிறதா 'வேதாந்தா நிறுவனம்'? 
வன்முறை வெடித்ததில் காவல்துறை உட்பட ஏராளமானோர் படுகாயம்!
Published on
Updated on
2 min read

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில், சுரங்கத் திட்டத்துடன் தொடர்புடைய சாலை கட்டுமானத் திட்டம் தொடர்பாக காவல்துறைக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பழங்குடி மக்களும், காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

வேதாந்தா லிமிடெட்டிற்கு ஒதுக்கப்பட்ட சிஜிமாலி சுரங்கத் தளத்தை ஷகாபாடி கிராமத்துடன் இணைக்கும் சாலை அமைப்பதை, கிராம மக்களும் உள்ளூர் பழங்குடியின சமூகத்தினரும் எதிர்த்து வருகின்றனர். போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்தபோது பதற்றம் மேலும் அதிகரித்தது. போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது கற்களை வீசியதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை மோதலின் விளைவாக, மூத்த அதிகாரிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட காவல்துறைப் பணியாளர்கள் காயமடைந்தனர். குறைந்தது ஏழு பணியாளர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, ராயகடா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ளவர்கள் காஷிப்பூர் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்பே ஒடிசாவில் உள்ள பழங்குடி மக்கள், 'பழங்குடியினர் உரிமை மீறல்' குற்றச்சாட்டுகளைத் வைத்துள்ளனர். நியமகிரி வனத்தின் உள்ள நலிவடைந்த பழங்குடியினக் குழுவான 'டோங்ரியா கோந்த்கள்' வசிக்கும் அருகிலுள்ள நியமகிரி மலையிலிருந்து பாக்சைட் தாதுவை வெட்டியெடுப்பதற்கான வேதாந்தாவின் முயற்சி முன்னதாக நிராகரிப்பைச் சந்தித்திருந்தது. லஞ்சிகர் அலுமினா சுத்திகரிப்பு ஆலைக்குத் தாதுவை வழங்குவதற்காக, பாக்சைட் இருப்பை வெட்டியெடுப்பதற்காக வேதாந்தாவும், அரசுக்குச் சொந்தமான ஒடிசா சுரங்கக் கழகமும் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கியிருந்தன. கலஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களில் பாக்சைட் சுரங்கத்திற்காக 660 ஹெக்டேர் வன நிலத்தை கையகப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட வன அனுமதியை 2010ல் மத்திய அரசு மறுத்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் சிக்கலை சந்தித்தது. பழங்குடியினர் உரிமைகள் மற்றும் அப்பகுதியின் சூழலியல், பல்லுயிர் பெருக்கத்தின் மீதான தாக்கம் குறித்த வன ஆலோசனைக் குழுவின் பாதகமான கருத்துக்களின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. அது, 2013 ஏப்ரல் 18 அன்று வழங்கிய தீர்ப்பில், சுரங்கத் திட்டத்திற்கு கிராம சபைகளின் அனுமதி தேவை என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டின் பிற்பகுதியில், சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க நியமகிரி மலைப்பகுதிகளில் நடைபெறவிருந்த சுரங்கத் திட்டத்தை 12 கிராம சபைகளும் நிராகரித்தன. இது வேதாந்தா நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

தற்போது, ஒடிசாவில் உள்ள பழங்குடி மக்கள், 'வேதாந்தா' நிறுவனத்தின் சிஜிமாலி சுரங்கத் தளத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், இடப்பெயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, உள்ளூர் மக்கள் சுரங்க நடவடிக்கைகளையும் அது தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதனால், காவல்துறைக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் நடந்த தாக்குதலில் காவலர்கள் உட்பட பொதுமக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும்பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com