முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்து.. போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களில் 337 பேர் கைது!!

உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களில் இன்று காலை 7 மணிவரையில் மொத்தம் 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்து.. போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களில் 337 பேர் கைது!!
Published on
Updated on
1 min read

முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையென வெடித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உத்திர பிரதேசத்தின் பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீஸ்காரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இன்று காலை 7 மணிவரையில் மொத்தம் 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் பிரயாக்ராஜ் நகரில் இருந்து 92 பேர், சஹாரன்பூரில் இருந்து 83 பேர், ஹத்ராசில் இருந்து 52 பேர், மொராதாபாத்தில் இருந்து 40 பேர், பெரோசாபாத்தில் இருந்து 18 பேர் மற்றும் அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com