தென்னாப்பிரிக்கா சென்று இந்தியா திரும்பியவருக்கு கொரோனா... ஒமிக்ரான் வைரஸா என சோதனை...

பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்று இந்தியா திரும்பியவருக்கு கொரோனா... ஒமிக்ரான் வைரஸா என சோதனை...
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய 39 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி இந்தியா திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது.

இதையடுத்து, வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றியவாறு தனிமைப்படுத்தப்பட்ட அந்நபரிடம் 7 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அந்நபருக்கு தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது. அவர் மட்டுமின்றி அவருடன் தொடர்பில் இருந்த மேலும் இருவருக்கு தொற்று பாதித்திருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இது ஒமிக்ரான் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com