
கடந்த ஜூலை 21 -ஆம் தேதி “'உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்' என்று ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரின் பதவிக்காலம் முடியவடையாத சூழலிலே அவர் பதவி விலகினார். இவரின் இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு -வும் ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து நாட்டில் துணை ஜனாதிபதி பதவி காலியாகிருந்தது. 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மூலம் துணை குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு புதியவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதால் கடந்த ஆகஸ்ட் 21 -ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி களம் கண்டார்.
எனவே இன்று காலை துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது, பிரதமர் மோடியை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
மொத்தமுள்ள 788 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 768 -பேர் வாக்களித்தனர்.
பாரத் ராஷ்டிர சமிதி, சிரோமணி அகாலி தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் இன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் இந்தியாவின் 14 -ஆவது துணை குடியரசு தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.