இந்த நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மொத்தம் 78 அமைச்சர்களில், 42 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் 4 பேர் மீது கொலை முயற்சி தொடர்பாக வழக்கு பதியபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.