
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, புதுச்சேரியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரியில் பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.