இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் இந்திய வங்கிகளுக்கு சுமார் 22 ஆயிரத்து 585 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.