ஐதராபாத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் கன மழை - வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி!

ஐதராபாத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் கன மழை - வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி!
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோடை வெயில் கடும் அனல் வெப்பத்தை கக்கி வருவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் ஐதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாது கடும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீதாராம்புரா, செகந்தராபாத், பெகும்பெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com