டெல்லி : கொரோனா பாதுகாப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ...! திரும்பப்பெற்ற உத்தரவு...!

டெல்லி : கொரோனா பாதுகாப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ...! திரும்பப்பெற்ற உத்தரவு...!
Published on
Updated on
1 min read

டெல்லியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று வேகமெடுத்து வந்த நிலையில், அதன் தீவிரம் குறைந்து உலகம் அதன் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் முன்னெடுத்து, தீவிரப்படுத்தி வருகின்றன. டெல்லி அரசு முன்னதாக டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 வரை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

தற்போது அந்த உத்தரவை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. மேலும், தேவைப்பட்டால் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.   

-- சுஜிதா ஜோதி

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com