"220 மாத ஆட்சியில் பாஜக 225 ஊழல்களை செய்துள்ளது" - பிரியங்கா காந்தி .

"220 மாத ஆட்சியில் பாஜக 225 ஊழல்களை செய்துள்ளது"   - பிரியங்கா காந்தி .
Published on
Updated on
2 min read

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ஜெபல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்;  சத்தீஷ்கர், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்,  பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடினார். மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாதங்களில் 225 "மோசடிகள்" நடந்ததாகக் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில்  வியாபம் மற்றும் ரேஷன் விநியோகத்தில் ஊழல் நடந்ததாகக் குறிப்பிட்ட அவர்,  "220 மாத ஆட்சியில் பாஜக 225 ஊழல்களை செய்துள்ளது" என்று கூறினார். மேலும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல், ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல், காவல்துறை ஆட்சேர்ப்பு ஊழல், சுரங்க ஊழல், கொரோனா ஊழல்  மின்சாரத் துறை ஊழல், இ-டெண்டர் ஊழல், டிவி பெட்டி விநியோக ஊழல் உள்ளிட்ட ஊழல்களின் பட்டியலையும்  பெயரிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியால் முதல் கட்டமாக உஜ்ஜைனியின் மகாகல் லோக் வழித்தடத்தில் 6 சிலைகள் சேதப்படுத்தப்பட்ட மே 28 அன்று காற்று வீசியதைக் குறிப்பிட்டு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய அரசு கடவுள்களைக் கூட காப்பாற்றவில்லை என்று விமர்சித்தார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் மேட்டுப்பாட்டு பணிகளை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் எனவும்  அவர் கேட்டுக் கொண்டார். எனவே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வரும்போது இவை அனைத்தும் சாத்தியமாகும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com