"இளைஞர்கள் 20 வயதிலேயே குழந்தை பெத்துக்கணும்.. அதுதான் நாட்டுக்கு நல்லது".. இவருக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் சொல்றாரு!?

"சமுதாயத்திற்கும், அவர்களுடைய சொந்த முன்னோர்களுக்கும் அவர்கள் செய்ய வேண்டிய மக்கள்தொகைக் கடமை (Demographic Duty) இது ....
sridhar vembu vs uppasana
sridhar vembu vs uppasana
Published on
Updated on
3 min read

Zoho கம்பெனியின் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்றும், இது சமுதாயத்திற்கும், முன்னோர்களுக்கும் அவர்கள் செய்ய வேண்டிய "சமூகக் கடமை" என்றும் கூறி உள்ளார்.

"நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர் (Entrepreneurs) ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து கொள்வதையும் குழந்தை பெறுவதையும் ஒத்திப் போடாமல், 20 வயதிலேயே முடிக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன்," என வேம்பு 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"சமுதாயத்திற்கும், அவர்களுடைய சொந்த முன்னோர்களுக்கும் அவர்கள் செய்ய வேண்டிய மக்கள்தொகைக் கடமை (Demographic Duty) இது என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். இந்தக் கருத்துக்கள் பழமையானதாக அல்லது பழைய ஃபேஷனாக இருக்கலாம், ஆனால் இந்த யோசனைகள் மீண்டும் மக்களிடம் எதிரொலிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ராம் சரணின் மனைவி மற்றும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் சிஎஸ்ஆர்-ன் துணைத் தலைவருமான உபசனா காமினேனி கொடுத்த ஒரு பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் வேம்பு இந்தப் பதிவை இட்டார்.

ஐஐடி ஹைதராபாத் மாணவர்களுடன் தான் பேசிய அனுபவத்தைப் பற்றி உபசனா பதிவிட்டு இருந்தார். அதில் திருமணம் குறித்த மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

"நான், 'உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்டபோது, பெண்களை விட அதிக ஆண்கள் கைகளைக் தூக்கினர்!" என்று உபசனா எழுதினார்.

"பெண்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது! இதுதான் புதிய, முற்போக்கான இந்தியா. உங்கள் இலக்கை நிர்ணயுங்கள். உங்கள் நோக்கத்தை வரையறுங்கள். உங்கள் பங்கை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் யாராலும் தடுக்க முடியாதவராக மாறுவதைப் பாருங்கள்," என்று அவர் புகழ்ந்து கூறினார்.

இந்நிலையில், வேம்புவின் இந்தக் கருத்து ஆன்லைனில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஒரு பயனர், ஆரம்பத் திருமணத்திற்கும் குடும்பம் அமைப்பதற்கும் உண்மையான தடை கலாச்சாரத் தயக்கம் அல்ல, மாறாக பொருளாதார நெருக்கடிதான் என்று சுட்டிக் காட்டினார். இன்றைய இளைஞர்கள் நிலையற்ற வருமானம், அதிக வேலை நேரம், அதிக வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை விழுங்கும் வாடகை ஆகியவற்றால் அவதிப்படுவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.

"இது மக்கள்தொகைப் பிரச்சனை அல்ல. இது பொருளாதாரப் பிரச்சனை. அதைச் சரி செய்யுங்கள், கைகள் தானாக உயரும்," என்று அந்தப் பயனர் எழுதினார்.

அதற்குப் பதிலளித்த வேம்பு, "பொருளாதார வசதி உள்ளவர்கள் கூடத் திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது கலாச்சாரப் பிரச்சனைதான்," என்று கூறினார்.

மற்றொருவர், 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், "மிகக் கடுமையான" வேலைச் சந்தையில் தன் கரியர் ஆபத்தில் சிக்கும் என்று சுட்டிக் காட்டினார். ஏனெனில் மகப்பேறு விடுப்புகள் (Maternity Breaks) பெரும்பாலும் கரியர் வளர்ச்சியை மெதுவாக்கும் அல்லது தடம் புரளச் செய்துவிடும் என்றார்.

"ஆமாம், எல்லாவற்றையும் விட எனக்குக் குழந்தைகளைப் பெற்றெடுக்கப் பிடிக்கும். ஆனால் அது மட்டுமே என் வாழ்க்கையின் ஒரே நோக்கம் அல்ல," என்றும் அந்தப் பயனர் மேலும் கூறினார்.

வேம்பு இதற்குப் பதிலளிக்கையில், "வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல. எந்த வயதிலும் சிறந்து விளங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 30 வயது பலருக்கு ஒரு புதிய தொடக்கமாகும். என் தாயிடமிருந்து இந்த ஆலோசனையைப் பெற்றதை நான் நினைவு கூர்கிறேன், அதைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் வாழ்க்கையை ஒரு பந்தயமாகப் பார்த்தால், 20 வயது இளையவரான மார்க் ஜக்கர்பெர்க்குடன் ஒப்பிடுகையில் நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேனா? எப்படியோ நான் தினமும் காலையில் நான் ஒரு தோல்வியாளன் என்று நினைத்து எழுவதில்லை. இந்த வாழ்க்கை நோக்குக்காக நான் என் தாயாருக்கு நன்றி சொல்ல வேண்டும்," என்றார்.

அதிக லட்சியம் கொண்ட 20 வயதுடையவர்களைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி வலியுறுத்துவது கெரியரை முற்றிலும் பாழாக்கிவிடும் என்று மற்றொருவர் வாதிட்டார். சிலர் ஆரம்பத்திலேயே குடும்பம் அமைத்துக் கொண்டு, பின்னர் விவாகரத்து பெற்று, பணமில்லாமல், தடையில்லாமல் இருந்த சக ஊழியர்கள் செல்வம் மற்றும் வளர்ச்சியில் அவர்களை முந்திச் செல்வதைப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு வேம்பு, ஒருவர் 28 வயதிற்குள் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், மீண்டும் எழுந்து வர "போதுமான நேரம்" இருப்பதாகப் பதிலளித்தார். லாரி எலிசன் கூட 31 வயதில்தான் தனது பயணத்தைத் தொடங்கினார் என்று குறிப்பிட்டார். "வயதான தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். 28 வயதிற்குப் பிறகும் நிறைய நேரம் இருக்கிறது," என்று அவர் கூறினார்.

வேம்புவின் தனிப்பட்ட வாழ்க்கை பின்னணி

57 வயதான ஸ்ரீதர் வேம்பு, 1990களின் பிற்பகுதியில் பிரமிளா ஸ்ரீனிவாசனைத் திருமணம் செய்து கொண்டார், இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். 2020 ஆம் ஆண்டில், பிரமிளா ஸ்ரீனிவாசன் விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.

ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆவணங்களின்படி, வேம்பு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புறத் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த பிறகு, தன்னையும் தங்கள் மகனையும் விட்டு விலகிச் சென்றதாகவும், பின்னர் வாட்ஸ்அப் மூலம் திருமணத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன்னிடம் கூறியதாகவும் பிரமிளா குற்றம் சாட்டினார். மேலும், கலிஃபோர்னியாவின் சமூகச் சொத்துரிமைச் சட்டங்களின் கீழ், தனக்கும் தங்கள் மகனுக்கும் உரிய பங்கைச் சுருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது சம்மதம் இல்லாமல், ஸோஹோவின் முக்கியச் சொத்துக்கள் மற்றும் பெரும்பாலான பங்குகளைத் தனது சகோதரி மற்றும் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ரகசியமாக மாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com