
அடையாளம் வெளியிடப்படாத நைஜீரிய நபர் ஒருவருக்கு, குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயதான அவர், இந்திய தலைநகர் டெல்லியில் வசிக்கிறார். சமீப காலங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத அவருக்கு, குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், இவர் இரண்டாவது நபராக இருக்கும் நிலையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறாவது குரங்கம்மை பாதிக்கப்பட்டவராக இவர் அடையாளம் காணப்படுகிறார்.
ஏற்கனவே, ஆப்ரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.