பாஜகவுடன் பிரசாந்த் கிஷோர் கூட்டணியா? நிதிஷ் குமார் குற்றச்சாட்டு!

பாஜகவுடன் பிரசாந்த் கிஷோர் கூட்டணியா? நிதிஷ் குமார் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு பிரசாந்த் கிஷோர்  செயல்படுவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  கூட்டணியில் இடம்பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து நிதிஷ்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கூறியது போல் அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக செயல்படுவதாக சாடினார். தேர்தல் வியூக வகுப்பாளர்  பிரசாந்த் கிஷோர் கூறியது போல் தான் அவரை தனது கட்சியில் சேர அழைப்பு விடுவிக்கவில்லை என கூறிய அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸில் இணைய அவர் தான் அறிவுறுத்தியதாகவும், தற்போது கிஷோர் பாஜக வசம் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com