ஆசிரியர் தினம்: தமிழக ஆசிரியர் உட்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது...!

ஆசிரியர் தினம்: தமிழக ஆசிரியர் உட்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது...!
Published on
Updated on
1 min read

ஆசிரியர் தின விழாவை யொட்டி, 2022ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்குகிறார்.

ஆசிரியர் தினம்:

முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

நல்லாசிரியர் விருது:

அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரளவுபதி முர்மு வழங்கி கவுரவிக்க உள்ளார். 

பிரதமர் மோடி சந்திப்பு:

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, விருது பெறும் 46 ஆசிரியர்களையும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com