இதேபோல் எளிமையான குடும்ப சூழலிலும், அயராது போராடி ஹாக்கி பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள நேகா கோயல் பற்றியும், அவரது குடும்பத்தினரையும் பற்றி பிரதமர் உரையாற்றினார். மேலும் ஒலிம்பிக்கில், பெண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பற்றியும் அவர் பேசினார். வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொண்ட அவர், போராடி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றதாகவும் தெரிவித்தார்.