அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு! போரினால் உச்சம் தொடும் அன்றாட பொருட்களின் விலைவாசி.. மக்களின் நிலை என்ன?

அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலைகள், பதினைந்து நாட்களில் 200 முதல் 300 சதவீதம் வரை..
medicines price hike
Published on
Updated on
1 min read

அத்தியாவசிய மருந்து பொருள்களின் விலை உயர்வு!

போரினால் உயரும் விலைவாசிகள்...-மக்களின் நிலை என்ன?

ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத்தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உலகெங்கிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வினால் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர். தற்போது இதனால் மருந்து விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலைகள், பதினைந்து நாட்களில் 200 முதல் 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகள் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலைகளில் ஏப்ரல் 1 முதல் ஒரு சிறிய உயர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index) தரவுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் மொத்த விலைக் குறியீட்டில் ஏற்படும் வருடாந்திர மாற்றம் 0.64956 சதவிகிதமாக உள்ளது,"என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) தெரிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால், பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்தசோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை அடங்கும். மிதமான மற்றும் கடுமையான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் சில மருந்துகளும், ஸ்டீராய்டுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஈரான் போரின் காரணமாக அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், துறைசார் இலாப வரம்புகளைக் கடுமையாக பாதித்துள்ளதால் இந்தச் சிறிய விலை உயர்வு வந்துள்ளது என்று மருத்துவ நிர்வாகி கூறியுள்ளார்.

மேலும், சிரப்கள், வாய்வழி சொட்டு மருந்துகள் மற்றும் கிருமியழிக்கப்பட்ட தயாரிப்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு திரவத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படும் கிளிசரின், புரோப்பிலீன் கிளைக்கால் மற்றும் கரைப்பான்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இடைநிலைப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதுமட்டுமின்றி, கடந்த சில வாரங்களில் ஏபிஐகளின் (APIs) விலைகள் சராசரியாக 30-35 சதவீதம் அதிகரித்துள்ளன. கிளிசரின் விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பாராசிட்டமால் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. பாலிவினைல் குளோரைடு மற்றும் அலுமினியம் ஃபாயில் போன்ற பேக்கேஜிங் பொருட்களின் விலையும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள போர்சூழல் காரணமாக, மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜ் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com