Rahul Gandhi: விவாதத்துக்கு அழைக்கும் அமித் ஷா; "we don't care" - உறுதியாக மறுக்கும் ராகுல்!

“எங்கள் குழந்தைகளின் மீது சுடும்படி அமித் ஷா தான் உத்தரவிட்டிருந்தால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால் அவர் குற்றவாளி. அவர் உத்தரவிடவில்லை என்றாலும் பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவர் தகுதியற்றவர்” - ராகுல் கறார்!
Rahul Gandhi: விவாதத்துக்கு அழைக்கும் அமித் ஷா; "we don't care" - உறுதியாக மறுக்கும் ராகுல்!
Rahul Gandhi: விவாதத்துக்கு அழைக்கும் அமித் ஷா; "we don't care" - உறுதியாக மறுக்கும் ராகுல்!
Published on
Updated on
3 min read

எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. 18 வது நாளாக இன்றும் கேள்வி நேரம் நடைபெறவில்லை.

இந்த மூட்டுக்கட்டையை உடைக்கும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை எதிர்க்கட்சிகளுக்கு 24 மணி நேர விவாதத்திற்கான வாய்ப்பை வழங்கினார். தான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயார் என்றும், புதன்கிழமை மதியம் 3 மணி முதல் வியாழக்கிழமை மதியம் 3 மணி வரை அவையில் இருந்தே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Amit Shah
Amit Shah

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை நிராகரித்தார். அமித் ஷா என்ன சொல்கிறார் என்பதை கேட்பதில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், நீட் மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது யார் என்பதற்கான பதிலைத்தான் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று நீட் மாணவர் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கிய விவகாரம் தொடர்பாக அமித் ஷா அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், நாடாளுமன்றம் முழுவதுமாக முடங்கிப்போனது.

இந்த சூழலில், விவாதம் வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் முறையாக ஒரு கடிதம் அளிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அரசு அவையில் விவாதத்திற்குத் தயார் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

“ஒரு கடிதம் எழுதி கொடுங்கள். இன்று மதியம் 3 மணி முதலே இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம். நாளை மதியம் 3 மணி வரை விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க பாராளுமன்றத்திலேயே தங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Rahul Gandhi
Rahul Gandhi

“எந்தக் கேள்விக்கும் நான் பதில் அளிக்கத் தயார்” என்று கூறிய அவர், "விவாதம் வேண்டுமா அல்லது தொடர்ந்து அவைப் பணிகளைத் தடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது இப்போது எதிர்க்கட்சிகளின் கையில்தான் இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.

முன்னதாக அமித் ஷாவை “காணாமல் போனவர்”, “தப்பியோடியவர்”, “ஓடிப்போனவர்” என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதற்கு பதிலளித்த அவர், "கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நான் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அறையில் உட்கார்ந்திருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளிலும் பாராளுமன்றம் இயங்க அனுமதிக்காத நிலையில், நான் என்ன செய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

விவாதங்களே வேண்டாம்: உறுதியாக நிற்கும் ராகுல் காந்தி

அமித் ஷா இந்த வாய்ப்பை வழங்கிய சிறிது நேரத்திலேயே, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அதை நிராகரித்தார்.

rahul gandhi
rahul gandhi

உள்துறை அமைச்சரின் “கற்பனையை / உபதேசங்களை” கேட்பதில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அடக்குமுறை தொடர்பாக பதில் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மாணவர்கள் மீது யார் சுட்டார்கள்? ஒரு மாணவரின் கண்ணை குருடாக்கியது யார்? ஒரு மாணவரின் காதில் சுட்டது யார்? ஆணி பதித்த லாத்தியால் மாணவர்களை அடிக்க யார் உத்தரவு பிறப்பித்தார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

“எங்கள் குழந்தைகளின் மீது சுடும்படி அமித் ஷா தான் உத்தரவிட்டிருந்தால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால் அவர் குற்றவாளி. அவர் உத்தரவிடவில்லை என்றாலும் பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவர் தகுதியற்றவர்” என்று அவர் கூறினார்.

“கடந்த 20 நாட்களாக அமித் ஷா காணாமல் போயிருக்கிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சருக்கு தைரியமே இல்லை; அவரால் அவைக்கு வர முடியவில்லை” என்றும் அவர் விமர்சித்தார்.

ஜூலை 20-ம் தேதி பருவமழைக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, டெல்லியில் நீட் போராட்டத்தின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் நன்கொடை திருட்டு ஆகிய இரண்டு விவகாரங்களிலும் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக எதிர்க்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன.

விவாதத்திற்கான அரசின் வாய்ப்பும், எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் என்ற அமித் ஷாவின் உறுதிமொழியும், முட்டுக்கட்டையை உடைக்கத் தவறிவிட்டன.

போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்த குறிப்பிட்ட பதில் கிடைத்தே ஆக வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ராமர் கோயில் திருட்டு தொடர்பான விவாதம் “பேச்சுவார்த்தைக்கே உட்படாதது” என்றும் காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

Rahul Gandhi: விவாதத்துக்கு அழைக்கும் அமித் ஷா; "we don't care" - உறுதியாக மறுக்கும் ராகுல்!
Rahul Gandhi vs Kiren Rijiju: ஓப்பனாக நடந்த விவாதம் - மகளிர் 30% இட ஒதுக்கீட்டை தடுப்பது யார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com