டெல்டா பிளஸ் தொற்று தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்டா பிளஸ் பரவல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
டெல்டா பிளஸ் தொற்று தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
Published on
Updated on
1 min read

கொரோனா வைரசின் மற்றொரு திரிபு வகையான டெல்டா பிளஸ் தொற்று இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மாறுபாடாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த வைரஸ், கொரோனாவின் 3-வது அலையை தோற்றுவிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் பரவல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், டெல்டா பிளஸ்சை கண்டறியவும், அதை தடுப்பதற்காகவும் அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளாதது ஏன்? என்றும் இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படி இருக்கிறது? என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அது குறித்த தகவல்கள் எப்போது கிடைக்கும்? 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் இருக்கும் திட்டம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com