அவதூறு வழக்கு: ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு இன்று விசாரணை !!

அவதூறு வழக்கு: ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு இன்று விசாரணை !!
Published on
Updated on
1 min read

அவதூறு வழக்குக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல்காந்தி தெரிவித்தது தொடா்பாக அவா் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக அவா் குஜராத்  உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பில் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டது.

இந்த சூழலில் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி அவா்  தாக்கல் செய்த மனு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தொிவித்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே இந்த அவதூறு வழக்கை பதிவு செய்த குஜராத் எம்எல்ஏ பூர்னேஷ் மோடி அவரது கருத்துக்களை கேட்காமல் இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com