இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் இதற்காக மாநிலத்தின் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இக்குழுவில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், வேளாண் அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இக்குழு முடிவெடுக்கும் எனவும் கூறினார்.