இதனிடையே சித்து முதல்வர் அமரீந்தர் சிங்-கை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமரீந்தர் சிங், சித்து தன்னை சந்திக்க நேரல் கோரியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது எனவும் தனக்கு எதிரான தனி மனித தாக்குதல்களுக்கு சித்து மன்னிப்பு கேட்கும் வரை அவரை சந்திக்க போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.