கரூர் துக்கமே இன்னமும் மறையல.. அதுக்குள்ளே ஆந்திராவில் நடந்த மாபெரும் துயரம்! கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் பலி! அதிர்ச்சியில் அரசு!

உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த கூட்ட நெரிசல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது..
கரூர் துக்கமே இன்னமும் மறையல.. அதுக்குள்ளே ஆந்திராவில் நடந்த மாபெரும் துயரம்! கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் பலி! அதிர்ச்சியில் அரசு!
Published on
Updated on
1 min read

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் அமைந்திருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் இன்று நடந்த கூட்ட நெரிசல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களுக்குப் புனிதமான நாளாகக் கருதப்படும் ஏகாதசி திதியையொட்டி, ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் கோவிலில் திரண்டதால் இந்தக் கொடூரமான நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் பல பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார். பக்தர்கள் உயிரிழந்தது "இதயத்தை நொறுக்குவதாக" இருப்பதாக அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த கூட்ட நெரிசல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் பக்தர்கள்  9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நாயுடு கூறியுள்ளார்.

அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதாவது, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைவாகவும், சரியான முறையிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், அப்பகுதி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சரவையில் அமைச்சருமான நாரா லோகேஷ் அவர்களும் இந்த உயிரிழப்புகளுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். "இந்த ஏகாதசி நாளில் நம்மை ஒரு பெரிய துயரம் சூழ்ந்துள்ளது" என்று கூறிய அவர், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் தான் பேசி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com