முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!!

முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!!
Published on
Updated on
1 min read

முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வந்தும் சில பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் மறுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிப்பதுடன், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு பயணிகள் விமான நிலையம் வந்து விட்டால் அவர்களை விமானத்தில் ஏற்ற மறுக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளது.  கோடை வெயில் உச்சமடைந்து விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com