இங்கிலாந்தின் போர்க்கப்பல் எச்.எம்.எஸ். குயின் எலிசபெத் இந்தியா வந்தது...

இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்தின் போர்க்கப்பல் எச்.எம்.எஸ். குயின் எலிசபெத் இந்தியா வந்தது...
Published on
Updated on
1 min read

இந்திய கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான எச்.எம்.எஸ். குயின் எலிசபெத், 40 நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக சூயஸ் கால்வாயை கடந்துள்ள போர்க்கப்பல், இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது. இந்திய கடற்படையுடன் இணைந்து மிகப்பெரிய போர் பயிற்சியில் அது ஈடுபடும் என கூறப்படுகிறது. இந்த பயிற்சி வருகிற 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக, இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com