
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக 12 ஆயிரத்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ்குறைந்துள்ளது. இதனால் நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 2.55 சாதவீதமாக குறைந்துள்ளது. இதில் தீவிர தொற்று பாதிப்புக்கு 17 பேர் பலியாகினர்.
நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 293 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும், 79 ஆயிரத்து 313 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 196 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 3 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 13 லட்சத்து 24 தடுப்பூசிகள் நேற்று ஒரே நாளில் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.