கேரளாவில் தக்காளி காய்ச்சல்: 5 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மருத்துவமனையில் அனுமதி!

5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தக்காளி காய்ச்சல்
கேரளாவில் தக்காளி காய்ச்சல்: 5 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மருத்துவமனையில் அனுமதி!
Published on
Updated on
1 min read

கேரளாவில் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே கொல்லம் மாவட்டத்தில் புதிதாக மர்ம காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது. குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களே காய்ச்சல், உடல் வலி அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தக்காளி காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 82 சிறார்கள் மருத்துவமனையில் இந்த மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com