இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை - துர்கா பூஜை பந்தல் சுவரொட்டியால் சர்ச்சை

இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை - துர்கா பூஜை பந்தல் சுவரொட்டியால் சர்ச்சை
Published on
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களில் பந்தல்கள் அமைத்து இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலத்தில் துர்கா பூஜைய முன்னிட்டு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பால் அமைக்கப்பட்டுள்ள பந்தலின் வாயிலில், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com