உயிருடன் உள்ள சாரை பாம்பை துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்கள் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!

உயிருடன் உள்ள சாரை பாம்பை துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்கள் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உயிருடன் உள்ள சாரை பாம்பை துண்டு துண்டாக வெட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாரை பாம்பு எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதால் விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமாகும்.

இந்நிலையில் கொடூரமான வகையில் உயிருடன் உள்ள சாரை பாம்பை துண்டு துண்டாக வெட்டிய இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com