சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 3 ஆசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜர்...

சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் 3 ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 3 ஆசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜர்...
Published on
Updated on
1 min read
சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் பக்தையான சுஷ்மிதா என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் வழங்கப்பட்டது. 
சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாகக் கூறப்படும், 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் அவர்கள் தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நேற்று மூன்று ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கங்களை  தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து அவர்களை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராஜ வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிசிஐடி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com