86-ல்.. 80 அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டோம்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெருமிதம்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
86-ல்.. 80 அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டோம்-  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெருமிதம்
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து, 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான திட்டம் செயல்படுத்தப்படுவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், 2021-22-ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com