கடலில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி... போலீசார் விசாரணை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 5 வயது சிறுவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி... போலீசார் விசாரணை..!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 5 வயது சிறுவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிதம்பரம் அருகே உள்ள அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது 5 வயது மகன் இன்று காலை கடற்கரை பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் சிறுவனை காணாததால் பெற்றோர் தேடி வந்துள்ளனர். 

இந்நிலையில் அய்யம்பேட்டை அருகே உள்ள பேட்டோடை கடற்கரையில் சிறுவனின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இயற்கை உபாதைக்காக சென்றபோது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com