ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்..மு.க.ஸ்டாலின்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து, ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். 
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்..மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னையில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் 3வது நாளாக ஆய்வு செய்தார். அப்போது கொளத்தூரில் உள்ள கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி அதிமுக அரசு என்ன செய்தது என தெரியவில்லை  என குற்றஞ்சாட்டினார்.

அதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். எஸ்.பி.வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின், வேலுமணி கமிஷன் பெற்றது நன்றாக தெரிவதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com