திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தில் ஒரு சிறு துளியாய், கலைஞரின் நம்பிக்கைக்குரிய உடன்பிறப்புகளில் ஒருவனாய் , உங்களின் சகோதரனாய் நானறிய பட்டதால், என் துணைவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் , காவல்துறையினர் எல்லாவற்றுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதும் எண்ணிலடங்கா கழக உடன்பிறப்புகள் என பல்லாயிரம் பேர் வந்து எனக்கும் என் மகள் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளித்தனர்.