நடிகை விஜயலட்சுமி புகார்.! சீமானுக்கு மீண்டும் சம்மன் ...!

Published on

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் அளிக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாகக்கூறி கடந்த 2011-ஆம் ஆண்டு வளரவாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.

பின்னர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். 7 முறை தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

ஆனால், அதன் பிறகும் சீமான் நேரில் ஆஜராகாததை அடுத்து இன்று மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை வாங்க மறுத்த சீமான் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com