அடேங்கப்பா.. 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பாம்.. எந்தெந்த மாவட்டம் வாங்க பார்க்கலாம்!!

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடேங்கப்பா.. 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பாம்.. எந்தெந்த மாவட்டம் வாங்க பார்க்கலாம்!!
Published on
Updated on
1 min read

வட தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,  இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம்,  நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி மற்றும்  திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை மற்றும் மறுநாள் 16 மாவட்டங்களுடன் கூடுதலாக பெரம்பலூர் மாவட்டத்திலும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான   மழை பெய்யக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  இலட்சதீவு, கர்நாடகா,  கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால்  வருகிற 20ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com